சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,505-க்கு ஏலம்
x

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 2டன் பூக்களை கொண்டு வந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,505-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.81-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.250-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Next Story