திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.69 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர்.

காணிக்கை எண்ணும் பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்ேதாறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோவிலில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

ரூ.1.69 கோடி காணிக்கை

தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, சிவலோகநாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

நிரந்தர உண்டியல்களில் மொத்தம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 1 கிலோ 470 கிராம் தங்கமும், 11 கிலோ 360 கிராம் வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். வெளிநாட்டு பண நோட்டுகள் 331-ம் காணிக்கையாக கிடைத்தன.


Next Story