தூத்துக்குடியில், வருகிற 22-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தூத்துக்குடியில், வருகிற 22-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Feb 2023 6:45 PM GMT (Updated: 16 Feb 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில், வருகிற 22-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புக்கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story