திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா


திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை நிழ்ச்சியை முன்னிட்டு அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story