திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு வழிபாடு


திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு வழிபாடு
x

திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவள்ளூர்

முருகன் கோவில்

திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டம்

இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர்.

அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


Next Story