தூத்துக்குடியில், 20-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தூத்துக்குடியில், 20-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில், 20-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 20-ந் தேதி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story