பரமத்திவேலூரில் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து ஏ.சி. எந்திரம் எரிந்து சேதம்


பரமத்திவேலூரில்  ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து  ஏ.சி. எந்திரம் எரிந்து சேதம்
x

பரமத்திவேலூரில் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏ.சி. எந்திரம் எரிந்து சேதம் அடைந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏ.சி. எந்திரம் எரிந்து சேதம் அடைந்தது.

ஏ.டி.எம். மையம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் ைமயம் உள்ளது. இந்த மையத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பணம் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயை அணைத்தனர்

இதற்கிடையே, தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவி மூலம் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக ஏ.டி.எம்.மையத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான பணமும் தீ விபத்தில் தப்பியது.


Next Story