ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.4¼ லட்சம் தப்பியது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் நேற்று முன்தினம் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மர்மநபர்கள் கடப்பாரையை கொண்டு இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கடப்பாரையை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஏ.டி.எம். முகவர் செல்வன் கூறுகையில், 'எங்களுடைய ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.1.25 லட்சம் இருப்பு இருந்த நிலையில் மீண்டும் அதில் ரூ.3 லட்சம் நிரப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. ஆனாலும் எந்திரத்தின் லாக் தரமாக இருந்த காரணத்தினால் ஏ.டிஎம். எந்திரத்தில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால் அதிலிருந்த ரூ.4.25 லட்சம் தப்பியது' என்றார்.


Next Story