மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் மீது தாக்குதல்


மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் மீது தாக்குதல்
x

ஆடு திருடர்கள் என நினைத்து மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

போச்சம்பள்ளி அடுத்த மல்லிகல்லை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 25). போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 21-ந் தேதி இரவு, தனது நண்பர்கள் சுப்பிரமணி (23), கார்த்திக் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சின்னகுட்டூர் அருகே சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆடு திருடும் கும்பல் என நினைத்து மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து தாக்கினார்கள். இது குறித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் சின்னகுட்டூரை சேர்ந்த பிரகாஷ் (35), ராஜாமணி (30), ஆறுமுகம் (35), முருகன் (32) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story