பணம் தர மறுத்த பஸ் டிரைவர் மீது தாக்குதல்


பணம் தர மறுத்த பஸ் டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பணம் தர மறுத்த பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கல்உருண்டான் சுனையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவர், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த விஜய் (25), விக்கி (24) ஆகிய 2 பேர் நாகராஜிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story