விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

விவசாயியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள கீழகட்டளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் சுகானந்தலிங்கம். விவசாயி. இவர் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி ஊழியர்கள் மதிப்பீடு தயார் செய்ய வீட்டை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வின்சென்ட்ராஜா மகன் தினேஷ் ராஜாவிற்கும், சுகானந்த லிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்ராஜா, சுகானந்தலிங்கத்தை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தினேஷ்ராஜாவை தேடி வருகின்றனர்.


Next Story