விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:15 PM GMT (Updated: 22 Oct 2023 7:15 PM GMT)

விவசாயியை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). விவசாயியான இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் (55) சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நம்பிராஜன் உள்பட 2 பேர் சேர்ந்து கண்ணனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story