விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள மாவடி எம்.எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் பொன்லிங்கேசன் (வயது 32) விவசாயியான இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கு குழு மூலம் ரூ.500 கடன் கொடுத்திருந்தார். அவரிடம் கடனை வசூல் செய்வதற்காக பொன்லிங்கேசன் சென்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கனிதுரை மகன்கள் அர்ஜூன் (23), முருகன் (25), தர்மர் (28) மற்றும் அவர்களது உறவினர் வசந்த் (20) ஆகியோர்களுக்கும், பொன் லிங்கேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பொன்லிங்கேசனை கற்களால் தாக்கியதாவும், இதை தடுக்க வந்த சிவபாலன் என்பவரை தாக்கியதாவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அர்ஜூன் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story