விவசாயி மீது தாக்குதல்; 2 பேருக்கு வலைவீச்சு


விவசாயி மீது தாக்குதல்; 2 பேருக்கு வலைவீச்சு
x

விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் சுப்பையா (வயது 36). விவசாயியான இவருக்கும், மீனவன்குளத்தை சேர்ந்த மூக்கன் மகன் முத்துக்குட்டிக்கும் (40) இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குட்டி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சுப்பையா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரையும் வலைவீச்சு தேடி வருகின்றனர்.


Next Story