விவசாயி மீது தாக்குதல்; 2 பேருக்கு வலைவீச்சு


விவசாயி மீது தாக்குதல்; 2 பேருக்கு வலைவீச்சு
x

விவசாயி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி வட்டகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 54). விவசாயியான இவருக்கும், இவரது அண்ணன் சைலஸ் (55) என்பவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேகர் வயலுக்கு, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சைலஸ், அவரது மகன் சுரேஷ் (23) ஆகியோருக்கும், சேகருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சைலஸ், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து சேகரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த சேகர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story