முன்னாள் போலீஸ்காரர் மீது தாக்குதல்

நாங்குநேரி அருகே முன்னாள் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சரவணன் (வயது 55) போலீஸ்காராக பணியாற்றிய இவர், அங்குள்ள கல் மண்டபம் ஒன்றில் படுத்திருந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த சிலர் சரவணனிடம், இங்கு எப்படி படுக்கலாம் என தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த சரவணன், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





