வீடு புகுந்து இளம்பெண், வக்கீல் மீது தாக்குதல்


வீடு புகுந்து இளம்பெண், வக்கீல் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

மயிலத்தில் வீடு புகுந்து இளம்பெண், வக்கீலை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

மயிலம்;

மயிலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேறொரு சமூகத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இளம்பெண்ணை மயிலம் சன்னதி வீதியை சேர்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன்(வயது 32) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் அங்கிருந்த இளம்பெண் மற்றும் வக்கீலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் மயிலம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் செல்வச்சீமான் தலைமையில் நிர்வாகிகள், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். பின்னர் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story