மொய் விருந்தில் வாலிபர் மீது தாக்குதல்


மொய் விருந்தில் வாலிபர் மீது தாக்குதல்
x

மொய் விருந்தில் வாலிபர் தாக்கப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வேளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் சேர்ந்து வா.கொல்லைக்காட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மொய் விருந்து, காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த விழாவிற்கு நெய்வேலி தென்பாதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது27), குமரேசன் (26) ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் இருவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது இவர்களுக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற வேளாம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (35) தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் சுரேஷை கல்லால் தாக்கினர். இதில் முகத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், குமரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story