விழுப்புரத்தில் பெண் வக்கீல் மீது தாக்குதல்


விழுப்புரத்தில்   பெண் வக்கீல் மீது தாக்குதல்
x

விழுப்புரத்தில் பெண் வக்கீல் மீது தாக்கியவா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னையன் மகள் பார்வதி (வயது 31). இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய அக்காள் கணவர் கருணாகரன் (45). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அவர் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடும்போது பார்வதியும், அவரது தாய் ராணி, தங்கை ஜெயந்தி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த கருணாகரன், பார்வதியை திட்டி செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருணாகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story