கடலாடி ஒன்றிய துணை தலைவர் மீது தாக்குதல்


கடலாடி ஒன்றிய துணை தலைவர் மீது தாக்குதல்
x

கடலாடி ஒன்றிய துணை தலைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்தி (வயது 48). இவர் கடலாடி ஒன்றிய துணை தலைவராக உள்ளார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் வெட்டு பெருமாள், இளையபெருமாள் மகன் ராமர், சுயம்புலிங்கம் மகன் முத்து கணபதி லிங்கம், வெட்டுப்பெருமாள் மகன் சுடலை மாடன் ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதில் 4 பேர் தாக்கியதில் ஆத்தி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story