கல்லூரி மாணவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது


தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி கல்லூரி மாணவரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கல்லூரி மாணவரை தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத்தை சேர்ந்தவர் முகமது நிஷாந்த் (வயது 19). கல்லூரி மாணவர். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி சத்யாநகர் கெபி அருகே நின்று கொண்டு இருந்தாராம்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் முகமது நிஷாந்தை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 ேபர் கைது

விசாரணையில், தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22), தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) மற்றும் முத்தையாபுரம் கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட தங்ககுமார் மீது ஏற்கனவே 9 வழக்குகளும், கார்த்திக் மீது 14 வழக்குகளும், சக்திவேல் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story