பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி


பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x

பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் படிக்கும் அவர்களது மகனை பார்க்க சென்றுள்ளனர். இந்தநிலையில் குமரேசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து குமரேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தது. கொள்ளையடிக்க வந்தவர்கள் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து குமரேசன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story