மதுக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி


மதுக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி
x

மதுக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் இந்த கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு கடைக்குள் புகுந்து கடையில் இருந்த காலாவதியான மது பாட்டில்கள் சிலவற்றை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. மேலும் கடையிலிருந்து பணத்தையோ, மது பாட்டில்களையோ கொள்ளையடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையில் இருந்த மது பாட்டில் இருப்புகளை கணக்கெடுத்து வருகின்றனர். இங்கு நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story