பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் மீது பாய்ந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த பெண் சங்கிலியை இறுக பற்றிக் கொண்டு போராடினார். இதில் சங்கிலி அறுந்து அந்த பெண்ணிடம் சிக்கிக்கொண்டது. தொடர்ந்து அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம நபர் அவரை விட்டு விட்டு காட்டுப் பகுதியில் தப்பிஓடிவிட்டான்.

இதுகுறித்து உடனடியாக கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story