11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவனத்திற்கு...!


11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவனத்திற்கு...!
x

11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் 11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story