ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 July 2023 9:21 PM GMT (Updated: 4 July 2023 10:50 AM GMT)

திருவோணம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள நடுவிக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது85). இவரது மகன் மோகன்ராஜ்(54). மோகன்ராஜ் சொந்தமாக ஆட்டோ வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சொந்த வேலையாக ஊரணிபுரத்துக்கு சென்று விட்டு, மோகன்ராஜும் அவரது தந்தை பழனிவேலும் ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஆட்டோவை மோகன்ராஜ் ஓட்டினர், அவரது தந்தை பழனிவேல் பின்னால் அமர்ந்து இருந்தார்.

அதம்பை கால்நடை ஆஸ்பத்திரி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்தது. இதனால் மோகன்ராஜ் ஆட்டோவை நிறுத்த முயற்சித்தாக கூறப்படுகிறது.அப்போது ஆட்டோ திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மோகன்ராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேல் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவோணம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை படுகாயமடைந்தார்.


Next Story