நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி


நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி
x

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி டிரைவர் பலியானார்.

வேலூர்

குடியாத்தம் அடுத்த பரதராமி வரதாரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவருடைய மகன் சஞ்சய் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பரதராமியிலிருந்து வரதாரெட்டிபல்லி கிராமத்திற்கு ஆட்டோ ஓட்டி சென்றார். சாமிரெட்டி பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரம் லாரி நின்று கொண்டிருந்தது. இந்த லாரி மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நெருங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண் காந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story