பண்ருட்டி அருகே தொழிலாளியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது


பண்ருட்டி அருகே தொழிலாளியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 5:35 AM GMT)

பண்ருட்டி அருகே தொழிலாளியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (50). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 12.6.2022 அன்று வீட்டில் இருந்தபோது தனது மகனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை திட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(40), தன்னைத்தான் பன்னீர் திட்டுகிறார் என நினைத்து பன்னீரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் 30.6.22 அன்று அவர் இறந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் 1 ஆண்டாக தலைமறைவாக இருந்த சிவக்குமார், பண்ருட்டியில் உள்ள வீட்டிற்கு மீண்டும் வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, சிவக்குமாரை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.


Next Story