திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர் தற்கொலை


திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2023 1:45 PM IST (Updated: 27 Feb 2023 1:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பாலதிருப்பதிநகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story