ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x

களக்காடு அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 57). ஆட்டோ டிரைவரான இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முத்துப்பாண்டி மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சிங்கிகுளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே விஷம் குடித்து மயங்கினார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி நேற்று இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story