ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

ஆட்டோ டிரைவர்

கரூர் அருகே உள்ள வெங்கமேடு இனி வி.வி.ஜி. நகர் பகுதிக்குட்பட்ட தில்லை நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இதனால், கோபால் கடந்த சில மாதங்களாக மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தில்லை நகரில் உள்ள தனது வீட்டில் கோபால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த தற்கொலை குறித்து கோபாலின் தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story