ஓடும் ரெயிலில் ஆட்டோ டிரைவர் திடீர் சாவு


ஓடும் ரெயிலில் ஆட்டோ டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 4 Jun 2023 7:22 PM GMT (Updated: 5 Jun 2023 7:18 AM GMT)

கடலூர் ஓடும் ரெயிலில் ஆட்டோ டிரைவர் திடீரென பரிதாபாக இறந்தார்.

கடலூர்

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் தீபக் (வயது 39) ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி ஷாலினி(32) மற்றும் மகள், மகனுடன் பரமகுடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார்.

இந்த ரெயில் கடலூகடலூர்கடலூர்ர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீபக்கிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீபக்கின் உடல் நிலைப்பற்றி அவரது மனைவி ஷாலினி டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தார். இதனிடையே அந்த ரெயில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த ரெயில் அங்கு நிற்காது.

இருப்பினும் தீபக்கின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபக்கை பரிசோதனை செய்தனர். அப்போது தீபக் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story