ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சதீஷ்க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





