ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை வடக்கு பாலபாக்கியாநகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மகாராஜன் (வயது 51). ஆட்டோ டிரைவர். இவருக்கு செண்பகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகாராஜன் கடந்த சில நாட்களாக புதிய ஆட்டோ வாங்கித்தர கேட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகாராஜன் நேற்று காலையில் 2 முறை தற்கொலை செய்ய முயற்சித்தாராம். இதனை குடும்பத்தினர் தடுத்துள்ளனர். ஆனாலும் அவர் மனைவி சமையல் அறைக்கு சென்றபோது, மற்றொரு அறையில் மகாராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story