மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:00 PM GMT)

மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

சிவகங்கை

காரைக்குடி

பள்ளத்தூர் போலீஸ் சரகம் பாலையூரை சேர்ந்தவர் சந்திரகுமார் ( வயது 50) ஆட்டோ டிரைவர். சம்பவத்தின் போது சந்திரகுமார் வீட்டின் மாடியில் துணிகளை உலர்த்துவதற்காக அதற்கான கம்பியில் போடும்போது வீட்டின் மின்இனைப்பிற்கான மின் கம்பியில் பட்டு சந்திரகுமாரை மின்சாரம் தாக்கியது.

இதனால் மயங்கிய அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர், இது குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story