ஆட்டோ டிரைவர் தற்கொலை


ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து ராம்நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 47). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மந்திரமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மந்திரமூர்த்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story