ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் அணைதலையூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாஸ்கர் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலையில் சிப்காட் பகுதியில் இருந்து அலவந்தான்குளத்திற்கு செல்லும் காட்டு பாதையில் ஆட்டோவில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து சுனில்பாஸ்கர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story