திருத்தணி முருகன் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரம்


திருத்தணி முருகன் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரம்
x

திருத்தணி முருகன் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கலெக்டர் திறந்து வைத்தார்

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் மூலம் அமைக்கப்பட்ட தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2021-ந் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன், கோவில் கண்காணிப்பாளர்கள் வித்யாசாகர், சித்ராதேவி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story