ஏ.வி.ராஜு பேச்சு - நடிகர் கருணாஸ் புகார்


ஏ.வி.ராஜு பேச்சு - நடிகர் கருணாஸ் புகார்
x

எந்தவித ஆதாரமுமின்றி ஏ.வி.ராஜு பேசியுள்ளார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

கூவத்தூர் விவகாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது சர்ச்சையானது. இதில் தனது பெயரை கெடுக்கும் நோக்கில் எந்தவித ஆதாரமுமின்றி ஏ.வி.ராஜு பேசியுள்ளார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

ஏ.வி.ராஜு அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார். ஏ.வி ராஜு மீதும் பல யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து வீடியோ பதிவுகளை நீக்கி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.


Next Story