விழிப்புணர்வு பிரசாரம்


விழிப்புணர்வு பிரசாரம்
x

ஏழாயிரம் பண்ணை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த தூங்கா ரெட்டிபட்டி பகுதியில் பொதுமக்களிடமும், கீழ செல்லையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலைகள், பட்டாசுகடைகள், மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி அறையில் மட்டுமே பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் வேதிப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பொது மக்களிடம் சாலை ஓரங்கள், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டி தீ வைக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story