விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

கரூர்

கரூரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர் அரசு கலைக்கல்லூரியில் முடிவடைந்தது. இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, தனி வட்டாட்சியர் நேரு வட்டாட்சியர் வெங்கடேசன், கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதேபோல் கரூர் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெடுந்தூர ஓட்டம் நடைபெற்றது. இதனை கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள், வீரர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story