தகவலறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


தகவலறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

தகவலறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி வேலூரில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடந்தன.

வேலூர்

தகவலறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி வேலூரில் விழிப்புணரங்வு மாரத்தான் போட்டிகள் நடந்தன.

தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வேலூரில் நேற்று நடந்தது. அதன்படி, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அப்துல்பாரி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து அண்ணாசாலை, மக்கான் சிக்னல், மீன் மார்க்கெட், கோட்டை சுற்றுச்சாலை வழியாக மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தை அடைந்தது. முதல் 3 இடங்களை பிடித்த தீயணைப்பு பிரிவு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story