விழிப்புணர்வு ஊர்வலம்

நாங்குநேரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இட்டமொழி:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முக்கிய தெருக்கள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அகஸ்டினா ஜெபராணி (மூலைக்கரைப்பட்டி), மார்க்கரெட் ஜான்சிராணி (நாங்குநேரி), வட்டார வளமைய மேற்பார்வையாளர் புஷ்பலதா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





