அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்


அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 139 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜானகி, பவுலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களை தலைமை ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி கூறினார். தொடர்ந்து நல்லாசிரியர் விருதுபெற்ற தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சாந்தி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story