பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 11:47 AM GMT)

கடையம் அருகே பெண்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே வெங்காடம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு அமர்சேவா சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பஞ்சாயத்து தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ரா பாபு, ஊராட்சி செயலாளர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமர் சேவா சங்கம் சார்பாக அகஸ்டா கிரேஸ், கண்மணி, சமூக மறுவாழ்வு பணியாளர் தனலட்சுமி (சிறப்பு ஆசிரியர்கள்) மிக்கேல் பொன்சுரேஷ் அமர் சேவா சங்கம் ரஷிகா, மீனா (மனையியல் துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்) ஆகியோர் நாடகம் நடத்தி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் வளர்ச்சி குறைபாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை எளிதில் கண்டறிதல் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், மகளிர்களுக்கான விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


Next Story