பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
x

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, போலீசார் சார்பில் பொம்மனப்பாடி கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் முறை குறித்தும், அந்த பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றும் தெரிவித்தனர்.


Next Story