பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி


பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கலவை அருகே பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மேல்புதுப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூஜா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கினார்.

மேலும் பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனடியாக இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story