விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:46 PM GMT)

செங்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்டு அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். செங்கோட்டை வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலட்சுமி, ஆசிரியா் பயிற்றுனா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் சார்லஸ், உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் பீட்டர் ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். முடிவில் வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் நன்றி கூறினார்.



Next Story