தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை


தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை
x

வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது. .

கரூர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வருகிற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

வருகிற வடகிழக்கு பருவமழையின் போது அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்காலங்களின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளின் போது பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும். மேலும் தீயினால் ஏற்படும் பாதிப்புகளில் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். மேலும் பல்வேறு வகையான தீ விபத்துகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினர்.

பேரிடர் காலங்களில்...

தொடர்ந்து மழைக்காலங்களின்போது சாலை ஓரங்களில் மரங்கள் மற்றும் கட்டுமான இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் ஒத்திகையினை அலுவலர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையினர் செய்து காண்பித்தனர். பின்னர் சிறப்பாக ஒத்திகையினை செய்து காண்பித்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார்.

முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மீட்புப்பணி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை) வடிவேல், உதவி அலுவலர் சந்திரகுமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒத்திகையை பார்வையிட்டனர்.


Next Story