பெண் குழந்தை திடீர் சாவு


பெண் குழந்தை திடீர் சாவு
x

சோழவந்தான் அருகே பெண் குழந்தை திடீரென்று இறந்தது.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருைடய மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் ஷாலினி என்ற பெண் குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ரேவதி 1½ வயது பெண் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்திருக்கிறார்.சிறிது நேரத்தில் குழந்தை தொடர்ந்து அழுது உள்ளது. இதனால் தாய் ரேவதி குழந்தையை பார்த்த போது உடல்நிலை சரியில்லாதது போல் காணப்பட்டது. உடனே குழந்தையை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் முதல் சிகிச்சை அளித்து உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அந்த குழந்தை ஷாலினி இறந்தாள். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவசக்தி விசாரணை நடத்தி வருகிறார். விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் சிசு கொலை செய்யப்பட்டதா? என்ற கண்ணோட்டத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story